பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9
பெண்ணிய அனுபவங்கள்


ந்த மாதம் பெண்கள் மாதம் என்பதால், பெண்களைப் பற்றி நான் எழுதிய கதைகளை நினைத்துப் பார்த்தேன். கற்பழிப்பு என்ற ஒன்றை வில்லன் மூலம் நடத்த விட்டு, பிறகு அந்தப் பெண்ணிற்காக பரிதாபப்பட்டு, எழுதும் எழுத்து வகையை, நான் தொட்டதில்லை. இது பெரும்பாலும் செக்ஸ் உப்பு போட்டு, கொடுக்கின்ற ஒரு பாசாங்கு எழுத்து என்பதுதான் என் கருத்து. இலக்கியத்தைப் பற்றி லியோ டால்டாய் சொல்லுகின்றபோது, “எழுத்தாளன் ஒருவன், அல்லது ஒருத்தி என்ன மனவுணர்வோடு எழுதுகிறாரோ, அந்த உணர்வு வாசகர் மனதில் பதிய வேண்டும். நல்லுணர்வு படிந்தால், அது நல்லியக்கியம், நச்சுணர்வு பதிந்தால், அது நச்சிலயக்கியம்” என்றார். நமது எழுத்தாளர்களில் பெரும்பாலோர், மானசீகமாக ஒரு பெண்ணை கற்பழித்துக் கொண்டே கதை பண்ணுவதால், வாசகன் மனதில்