பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


10
அனுபவ படிப்பினை

னக்கு எல்லோருக்கும் ஏற்படுவது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது, அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதே, அனுபவத்தைவிட முக்கியம் என்று, லியோ டால்ஸ்டாய் சொன்னதுபோல், அந்த அனுபவத்தில் எனக்கொரு மகத்தான படிப்பினை கிடைத்தது. அது என் வாழ்க்கை அணுகும் முறையையும், எதிர்காலப் படைப்புகளையும் மாற்றக்கூடியது. ஆகையால் இந்த இதழில், என்னென்ன எழுதினேன் என்பதைவிட, என்ன எழுதப் போகிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

எதிர்கால நாவல்

சென்ற டிசம்பர் மாத மத்தியில் குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வி. அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கூட்டத்தில் உரையாற்றுவதை செய்தியாக்குவதற்காகச் சென்றிருந்தேன். வயலுக்கு களையெடுத்தது மாதிரியாயிற்று, மாட்