பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

சு. சமுத்திரம் ☐

குறிப்பு:

1. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும், என் குடும்ப நண்பருமான தோழர் செந்தில்நாதன் இந்த வழக்கை எங்களுக்காக வாதாடினார். வெற்றி கிடைத்தது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இருந்து 10,000 ரூபாய் வந்தது.

2. “ஊருக்குள் ஒரு புரட்சி”, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாடநூலாய் இருந்ததாய் கேள்வி. கேள்வி என்று சொல்வதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பாடநூலாக வைக்கப்படுவதை அவருக்கு தெரியப் படுத்துவதே கிடையாது.