பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


13
யமுனைக் கரையில்...


‘நண்பர் வட்டத்தின்’ அக்டோபர்-நவம்பர் 90 இதழில் என்னைப்பற்றி ஆசிரியர் எழுதிய குறிப்பு, என் மனதை நெகிழச் செய்தது. பல்வேறு தோழர்கள், குறிப்பாக எழுத்தாளர்களும், எனக்குப் பல கடிதங்கள் எழுதினார்கள். ஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட தொலைக்காட்சி அனுபவத்தை வைத்து, ‘சத்திய ஆவேசம்’ என்ற நாவலை எழுதினேன். இதேபோல், ஒருவேளை இதன் இரண்டாவது பாகமாக ஒரு நல்ல நாவல் வரலாம். ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் சோதனை படைப்பிலக்கியத்தில் சாதனையானால் அதுவும் நல்லதற்கே. என் அனுபவங்களை வைத்து அப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்த முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்ல முடியும்.

இதற்கிடையே இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லியில் ஒரு மாத காலம் தங்கியிருந்த அனுபவத்