பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

221

ஒரு யானையின் காதல்

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் சிமோகா காட்டிற்கு டூர் போயிருந்த போது காட்டிலாகா அதிகாரிகள், ஒரு அரிய விபரத்தைச் சொன்னார்கள்... அதாவது சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண் யானையை, காட்டு ஆண் யானை விரும்புமாம். ஒரு வேளை அதன் கண்களுக்கு இந்தச் சங்கிலி யானை நகை நட்டுப் போட்ட குடும்பப் பெண்ணாகத் தெரியுமோ என்னமோ பழக்கப்பட்ட பெண் யானைக்கும் இந்த காட்டு யானைதான் பிடிக்குமாம். பக்கத்தில் உள்ள பழக்கப்பட்ட ஆண் யானை பிடிக்காதாம். ஆகையால் வன இலாகா அதிகாரிகள் பழக்கப்பட்ட இந்தப் பெண் யானைகளை காட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். இவைகளும் காட்டு யானைகளுடன் சல்லாபம் செய்துவிட்டு வன இலாகா அதிகாரிகளிடமே திரும்பி விடுமாம். எவ்வளவு பெரிய சத்தியக் கட்டுப்பாடு... எவ்வளவு பெரிய காதல் வேகம்... பாவம்... பழக்கப்பட்ட ஆண் யானையை.... இம்போடன்ட் பெல்லோ... எந்தப் பெண் யானையும் சீண்டாதாம்... இதை வைத்து, ‘மனிதா தெரிந்து கொள்’ என்று தேவியில் ஒரு சிறுகதை எழுதினேன்... தலைப்பு வேறு வைத்திருக்கலாம் போல் தெரிகிறது....