பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


21
இஸ்லாமியத் தோழர்களுக்காக


மூட்டம்

அயோத்தி சம்பவத்திற்கு பிறகு நெல்லைக்கு போய்விட்டு ரெயிலில் திரும்பி வந்தபோது பழமையான பழுத்த காங்கிரஸ்வாதியும், நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.கே.டி.ராமச்சந்திரன், தி.மு.க. பிரமுகர் திரு. ஜின்னா ஆகியோருடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது அயோத்தி சம்பவங்களுக்கு எதிரொலியாக நடைபெற்ற வகுப்பு கலவரங்களைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் நீண்ட பாரம்பரியத்தின் காரணத்தால், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவில்லை என்று பெருமிதமாகச் சொன்னேன். அப்போது திரு. ஜின்னா குறுக்கிட்டு, தமிழக முஸ்லீம்கள்தான் இப்போது அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார். வட இந்தியாவிலாவது முஸ்லிம்கள் திருப்பி தாக்கி, தங்களது ஈகோவை, திருப்தி செய்துக் கொண்டார்கள். ஆனால் தமிழகத்திலோ முஸ்லிம்கள் மனப்பிராந்தியோடு வாழ்கிறார்கள் என்றார். இதற்கு எடுத்துக்காட்டாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை இந்து வகுப்புவாதிகள் முற்றுகையிட்டு, அங்குள்ள முஸ்லிம் மக்களை மூன்று நாள் பட்டினி போட்டுச் சரணடையச் செய்ததையும், போலீஸ் துப்பாக்கி சூடு ஏற்பட்டதையும், நினைவுபடுத்தினார். இப்பொழுது தமிழக முஸ்லீம்கள்தான் மற்ற முஸ்லீம்களை விட கையறு நிலையில் தவிப்பதாகத் தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.

மறுமுறை நெல்லைக்குச் சென்றபோது மேலப்பா