பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4
கோலங்களான அலங்கோலங்கள்


கலெக்டர் வருகிறார்

நான் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக, செங்கை மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றினேன். அந்தப் பகுதிக்கு கலெக்டர் வேட்டைக்கு வருவார். அவர் ஓய்வெடுக்கும் அறைக்கு வெளிப்பக்கம் நடக்கக்கூட விடமாட்டார்கள். கலெக்டருக்கு சுகக்கேடோ, துக்கக்கேடோ ஏற்படுமாம். கலெக்டர்கள் முன்பு தாசில்தார்களும், ஆணையர்களும் குழைகிற குழைவும், அவருக்கு இடைவெளி விட்டு, இவர்கள் நிற்பதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். கலெக்டருக்கு மூன்று அடி தொலைவில் தாசில்தாரோ, ஆணையரோ இருப்பார்கள். கலெக்டர் தாம் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன்னால் நகர்ந்தால், தாசில்தார் ஒரு அடி மட்டுமே முன்னால் நகர்வார். பின்னால் நகர்ந்தாலும் இப்படியே. எப்படியும் மூன்றடி ‘கேப்’, பராமரிக்கப்படும். அந்தச்