பக்கம்:எனது நண்பர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148  எனது நண்பர்கள்

பெருங்குணம்

ஏழை மக்களுக்கு இரக்கம் காட்டுதல், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்தல், பிடிவாதக்காரர்களுக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, தாராள மனப்பான்மை ஆகிய ஐம்பெருங் குணங்களையும் ஒருங்கே பெற்றிருந்த குணக்குன்று அவர்.

நல்லறிஞர்

குடும்பத்திலும் தொழிலிலும் பங்கு பெற்று, வாழ்விலும் தாழ்விலும் உற்ற துணையாகி, எப்போதும் உடனிருந்து உழைத்து மறைந்த மைத்துனர் திரு. ஆர். சேஷசாயி அவர்களை உள்ளத்தே வைத்து வாழ்ந்த நன்றி மறவா நல்லறிஞர் அவர்.

சீர்திருத்தவாதி

தான் தோற்றிய தென்சென்னை மின்வழங்கும் நிறுவனத்திற்ரு என்னைத் தலைவனாக்கி, அதை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து மகிழ்ந்து, சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, நாட்டு வேற்றுமை, மொழி வேற்றுமை, கட்சி வேற்றுமை, நிற வேற்றுமை, உணவு வேற்றுமை ஆகிய அனைத்தையும் பாராது, எல்லோரையும் தம்மவராய்க் கொண்டு நடந்து காட்டிய ஓர் உயர்ந்த சீர்திருத்தவாதி அவர்.

பேச்சுக் கலைஞர்

அதிகாரிகளோடு பேசுவது எப்படி? அன்பர்களோடு பேசுவது எப்படி? நிர்வாகிகளோடு பேசுவது எப்படி? தொழிலாளிகளோடு பேசுவது எப்படி? மனைவியோடு பேசுவது எப்படி? மக்களோடு பேசுவது எப்படி? என்பதை நன்குணர்ந்து, அருமையாகப் பேசிப் பிறரையும் தம்மைப் பின்பற்றிப் பேசும்படி செய்த பேச்சுக் கலைஞர் அவர்.