பக்கம்:எனது நண்பர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150  எனது நண்பர்கள்

யில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று நானும் எண்ணினேன். எனது கண்கள் இன்பக் கண்ணீரை துளிர்த்தன. அடுத்து மிக விரைவில் நேர்ந்த அவரது பிரிவு துன்பக் கண்ணீரை உதிர்க்கும்படி செய்து விட்டது. நாடு கலங்கிற்று. நாமும் கலங்கினோம். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல் ஆறுதல் அளிக்கவேண்டும்.