இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம் □ 35
வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு, தவறு என்று கண்டால் தீமையற்றச் சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான்.
திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறவுரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள்.
நான் சிலருடைய திருவடிகளை நினைத்து அடிக்கடி வணங்குவேன். திரு. பிள்ளை அவர்கள் திருவடிகளும் அதில் சேர்ந்ததுதான். காரணம் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டுமல்ல, உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதினாலுமே யாம்.
வாழ்க வ. உ. சி. புகழ்.
வாழ்க அவர் பிறந்த நாடு.