பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


சொந்தக் கம்பெனிக்கு ஆயத்தம்

மதுரை வந்ததும் பெரியண்ணா கணக்கர் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அண்ணாவும் மாமாவும் கலந்து யோசித்தார்கள். எதிர்பாராது கம்பெனியில் தகராறு ஏற்படுமானால் உடனே சொந்தமாகக் கம்பெனி தொடங்குவதற்கான ஆயத் தங்களைச் செய்தார்கள். ஒரு தையற்காரரை வீட்டிலேயே அமர்த்தி, நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்க ஏற்பாடு செய்தனார். வெல்வெட், சரிகை முதலியவைகள் வாங்கப்பட்டன. எனக்கும் சின்னண்ணாவுக்கும் எல்லா நாடகங்களுக்கும் உடைகள் தயாராயின.

இந்த விபரத்தை அறிந்த சின்னையாபிள்ளை பெரிய அண்ணாவைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார். “தங்களுடைய மனநிலை எப்படியெல்லாம் மாறுமென்று எங்களுக்குப் புரிய வில்லை. எதிர்பாராத நிலையில் திடீரென்று கம்பெனியை விட்டு விலக்கி விட்டால் என்ன செய்வது? அதற்காக, முன் எச்சரிக்கையாய்த் தயாராகிறோம். தாங்கள் சரியாக நடந்து கொள்ளும் வரையில் நாங்கள் கம்பெனியிலிருந்து விலகமாட்டோம்” என்று பெரியண்ணா உறுதி கூறினார்.

உடைகள் தயாரித்தது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், பெரியண்ணாவும் மாமாவும் இந்த வகையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் விட்டுக் கொடுத்தார். மதுரையில் நாடகங்கள் நல்ல வசூலோடு நடைபெற்றன.