இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
150
மிகவும் லாபகரமாக இருந்தது. அந்தச் சமயத்தில்கூட பழனியா பிள்ளைக்குப் பங்கு எதுவும் கொடுக்கவில்லை. எனவே பழனியா பிள்ளை கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவர் தொடர்ந்து கம்பெனியில் உழைத்து வந்தவரானதால் எல்லோ ருக்கும் அவரிடம் மதிப்பும் அனுதாபமும் இருந்தன. பிரிந்துபோன அவர் உடனடியாகச் சொந்த கம்பெனி துவக்க ஏற்பாடு செய்வ தாகவும் அறிந்தோம். அவர்மீது பற்றுக் கொண்ட சில நடிகர்கள் கம்பெனியை விட்டுச் சொல்லாமலேயே விலகி அவரிடம் போய்ச் சேர்ந்தார்கள். வேறு சில முக்கியமான தொழிலாளர் களும் அவருக்காக விலகினர்கள். திருநெல்வேலி நாடகம் முடிந்து நாகர்கோவிலுக்குச் சென்றோம்.