பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274


கிறோம்” என்று சொன்னார். என். எஸ். கிருஷ்ணன் வருத்தத்துடன் பின்னும் சில நாட்கள் இருந்து பார்த்தார். பயனில்லை. நாயுடு அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதி வற்புறுத்தினார். அச்சமயம் கோல்டன் கம்பெனியே நாகர்கோவிலுக்கு வந்து விட்டது. நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நானும் என். எஸ். கே.யும் அடிக்கடி நாடகங்கள் பார்த்தோம். சாரதாம்பாள் என்.எஸ்.கிருஷ்ணனைத் தம் கம்பெனியில் சேர்ந்து விடும்படி நேரில் கேட்டுக்கொண்டார். என். எஸ். கே. அதுபற்றி யோசிப்பதாகக் கூறினார். நாகர்கோவில் முடிந்து கம்பெனி திருவனந்தபுரம் சென்றது. அங்கு சென்ற பிறகும் நாயுடுவின் வற்புறுத்தல் கடிதங்கள் வந்தன. இறுதியாக வேறு வழியில்லாத நிலையில் என். எஸ். கிருஷ்ணன் ஒருநாள் எங்களிடம் வந்து கண்களில் நீர் ததும்பப் பிரியாவிடை பெற்று, சாரதாம்பாள் கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தார்.