பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295


பருவமுடைய வாலிபர்கள்! வந்திருக்கும் நடிகையரோ இளமையும் எழிலும் குலுங்க நிற்கும் மங்கையர்! இந்நிலையிலே “இரும்பும் காத்தமும் பொருந்தும் தன்மைபோல்” விபரீத விளைவுகள் ஏற்படுவது இயற்கையல்லவா? இந்தப் பயம் அண்ணாவுக்கும் ஏற்பட்டிருந்தது என்பது சினிமாக் கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்தது. தாதரில் ஸ்டுடியோவின் அருகிலேயே ஒரு பெரிய பங்களா ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பெண்களுக்கு மாடி மீதும். எங்களுக்குக் கீழேயும் இடம் ஒதுக்கப் பட்டது. வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனேயே எங்கள் பெரியண்ணா, “எல்லோருக்கும் சொல்கிறேன். எவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாடிக்கு அனுமதியின்றிப் போகக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டார்.