பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முத்தமிடும் காட்சி

நானும் ருக்மணியும் நடிக்க வேண்டிய காதல் காட்சி வந்த போது ஒத்திகையை நினைத்து என் உள்ளம் வெட்கத்தால் குன்றியது. காதல் கட்டம் என்றால் எப்படி?... அன்றுவரை நான் கேள்விப்பட்டிராத முறையில் புது மாதிரியாகக் காதல் செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. நான் ருக்மணியை ஒரு கையால் அணைத்தபடி அவருடைய வலது கையிலே முத்தம் கொடுக்க வேண்டும். எப்படி? சாதாரண முத்தமா? கைவிரல்களிலிருந்து தொடங்கித் தோள் வரையில் முத்தமழை பொழிந்த கொண்டே போகவேண்டும். சரியாக ஒரு டசன் முத்தங்கள்!... கூச்சத்தால் என் உயிரே போய்விடும் போலிருந்தது. ராஜா இதை நடித்தும் காண்பித்தார். நானும் ஒரு வகையாக நடிக்க முயன்றேன். அதிகமாக வெட்கப்படுவதைக் கண்ட ராஜா, சிரித்துக் கொண்டே படமுதலாளிகளில் ஒருவரான திரு எம். சோமசுந்தரம் அவர்களை நோக்கி,

“என்ன சோமு, இந்தப் பயல் சுத்தப் பேடியாக இருக்கிறான். சொந்தப் பெண்டாட்டியிடத்திலேயே இப்படிக் கூச்சப் படுகிறானே, அப்புறம் அன்னியன் மனைவியான மேனகாவை எப்படி பலாத்காரம் பண்ணப் டோகிறான்?” என்று கூறினார். எனக்கோ மானம் போயிற்று! ஆத்திரம் ஆத்திரமாகவும் வந்தது. எப்படியோ நடித்தேன். எனக்கும் குக்மணிக்கும் உள்ள காதல் காட்சி இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாம் நாள் புகைப்படம் பிடிப்பதற்காக எங்கள் இருவரையும் ‘லவ்போஸ்’ கொடுத்து நிறுத்தினார் ராஜா. அவர் நிறுத்தியபடி நான் ருக்மணியின் இடுப்பை அணைத்தவாறு நின்றேன். மின்சார