பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312



இஷ்டப்படி செய்யுமாறு சைகை காட்டி விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய் விட்டார். பிறகு முறைப்படி காரியங்கள் ஒழுங்காக நடைபெற்றன. ராஜாவின் வலிமைக்கு அந்த நாளில் வடநாட்டார் அவ்வளவு தூரம் பயந்திருந்தார்கள்.

பட அதிபர்களும் நடித்தனார்

எஸ். கே. மொய்தீன், எம். சோமசுந்தரம், கேசவலால் காளிதாஸ் சேட் ஆகிய சண்முகானந்தா டாக்கீசின் படாதிபதிகளும் மேனகாவில் எங்களோடு நடித்தது படத்திற்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சோமு, இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயராக நடித்தார். எஸ். கே. டாக்டராகவும், ‘கேசவலால் சேட், வராக சாமி காரில் அடிபட்ட இடத்திற்கு வரும் வணிகராகவும் நடித் தார்கள். இவர்களே யெல்லாம் நடிப்பதற்குத் துரண்டியவரே ராஜாதான். இன்ஸ்பெக்டர் சஞ்சீவி ஐயர் கொஞ்சம் பெரிய பாத்திரம். நடிப்புத் துறையில் சிறிதும் பழக்கமில்லாத சோமு அவர்களே இவ்வேடம் தாங்கச் செய்து வெற்றிகரமாக நடிக்க வைத்த ராஜாவை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

முப்பதே நாட்களில் படம் முடிந்தது

படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்றது. இன்றைய நிலையைப்போல் ‘டீ’ வராத சண்டையோ, கார் வராத தாமதமோ, வேஷம் போடாத தடங்கலோ, செட்டிங் தயாராகாத தொல்லையோ எதுவும் மேனகா படப் பிடிப்பில் ஏற்படவில்லை. நடிகர்கள் பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். டைரக்டர் பூரணமாக ஒத்துழைத்தார். பெண் நடிகையரும் எவ்விதக்குழப்பமும் செய்யவில்லை. முப்பதே நாட்களில் மேனகா படப் பிடிப்பு முடிந்தது. ஏறத்தாழ இரண்டு மாத காலம் பம்பாயில் தங்கினோம். மேனகா படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் 9ஆம் நாள் நாங்கள் பம்பாயிலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டோம். அப்போது எங்களை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்த ராஜா, இரு கரங்களையும் மேலே உயர்த்தியபடி கண்களில் நீர் பெருக,