பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313



“டேய் பசங்களா, தொழில்நேரத்தில் உங்களைக் கோபமாக ஏதாவது திட்டியிருப்பேன்; தாறுமாருகப் பேசியிருப்பேன் என்ன தவறு செய்திருந்தாலும் மறந்திடுங்கடா!” என்று கூறியதை எண்ணும்போது இன்றும் என் விழிகளில் நீர் பெருகுகிறது! இத்தகைய வீர நடிக ராஜா 1944 நவம்பர் 24இல் கோவையில் மாரடைப்பினால் மாண்டார் என்ற செய்தி கேட்டு நாங்கள் எல்லாம் கண்ணிர் விட்டோம். வியப்பென்னவென்றால் தமிழ் நாட்டிலிருந்து வடநாடு சென்று, திரையுலகில் முப்பதாண்டு காலம் தனியரசு செலுத்திய அந்தக் கலைச்செம்மல் - வீரத் தமிழனின் மரணச்செய்தி எந்தப்பத்திரிகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழன் என்ற இன உணர்வும் எழுச்சியும் இந்த நைந்த தமிழகத்திற்கு என்றுதான் வருமோ என்று அன்றே ஏங்கினேன்.