பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320


ராகவ ரெட்டி வேடத்திற்கு வேறு ஒருவரைப் போடும்படி படியாக ரங்கராஜு கூறிவிட்டாரென்றும், சுண்டுர் இளவரசனுக்கு மட்டும் என்னைப்போட உறுதி செய்திருப்பதாகவும் அதற்குச் சம்மதிக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தது. பெரியண்ணாவுக்கு என்னைத் தனியே அனுப்ப விருப்பமில்லை.

“வுண்முகத்தையும் பகவதியையும் அழைத்து போவ தானல் அனுப்புகிறேன். ஷண்முகத்தை மட்டும் அனுப்பிவிட்டுக் கம்பெனியை நிறுத்திவைக்க நான் விரும்பவில்லை” என்று ஜூபிடருக்குப் பதில் எழுதினார் பெரியண்ணா. எனக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பதாகவும் ராஜா சாண்டோ வற்புறுத்திக் கூறியிருப்பதாகவும் அவசியம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் மீண்டும் கடிதம் வந்ததது. பெரியண்ணா இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். வேறு வழியின்றி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் குண்டுர் இளவரசனுக நடித்த பி.யு. சின்னப்பாவை ரூபாய் ஐநூறுக்கு ஒப்பந்தம் செய்ததாக அறிந்தோம். சின்னப்பா அவர்களுக்கு சந்தரக்காந்தாதான் முதல் படம் என்பதும், அவருடைய வளர்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.