பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாலாமணி - பக்காத்திருடன்


நாடகங்கள் தொடர்ந்து சிரிய ஊர்களில் நடை பெற்று வந்தன. விருதுநகரில் நாங்கள் இருந்தபோது மேனகா படத்தின் மற்றும் இரு பங்காளிகளான ஈரோடு முத்துக் கருப்பன் செட்டியாரும், கேசவலால்காளிதாஸ் சேட்டும் வந் தார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பலாமணி - பக்காத் திருடன் நாவலைப் படமெடுக்கப் போவதாகவும் நாங்கள் நால் வரும் அதில் நடிக்க வேண்டுமென்றும் அழைத்தார்கள். எங்கள் நால்வருக்கும், எங்கள் குழுவிலுள்ள இன்னுஞ்சில முக்கிய நடிகர் களுக்குமாகச் சேர்த்து ஒன்பதியிைரம் ரூபாய்கள் தருவதாகக் கூறினார்கள். கம்பெனி வளர்ச்சியைக் கருதி இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.

சத்தியமூர்த்தியின் பெருந்தன்மை

அப்போது பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது குடும்பத்தினருடன் விருதுநகருக்கு வருகை புரிந்தார். பிரமாண்டமான ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உள்ளுர் காங்கிரஸ் கமிட்டியார் விரும்பியபடி அன்று நாங்களும் நாடகத்தை நிறுத்தி னோம். நேருவுடன் சத்தியமூர்த்தி ஐயரும் சுற்றுப் பயணம் செய்தார். தேசபக்தர் சத்தியமூர்த்தி ஒரு சிறந்த கலா ரசிகர். பம்மல் சம்பந்தனார் நாடகங்களில் நடித்தவர். மேனகா படம் சென்னை யிலே திரையிடப்பட்டபோது ஒரு நாள் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். படத்தில் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்னும் மகாகவி பாரதியார் பாடலைச் சேர்ந்திருந் தோம். இந்தப் பாடல்தான் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடப் பெற்ற பாரதியார் பாடல். இந்தப் பாடலைப் படத்தில் சேர்த்திருந்தது குறித்து, சத்தியமூர்த்தி வெகுவாகப் பாராட்டி