பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324


கெடக்குதுப்பா; எழுதினால் போச்சு. சினிமாப் பாட்டுத் தானே?"ன்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்குவார்.

ஈரோட்டிலும் ஏற்காடு மலைப்பகுதியிலும் பாலாமணிக்குச் சில வெளிப்புறக் காட்சிகள் படமெடுக்கப்பட்டன.

டைரக்டர் பி. வி. ராவ்

பாலாமணியை டைரக்ட் செய்ய பி. வி. ராவ் வந்து சேர்ந்தார். அவர் ஒத்திகை பார்க்கும் முறையும், படம் எடுக்கும் விதமும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தன. யார் எதைச் சொன் ஞலும் கேட்கமாட்டார். தாமே சர்வாதிகாரியாக இருந்து செய லாற்றினார். எங்களோடு நடிக்க வந்திருந்த பெண்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது. அடிக்கடி எங்களுக்குள் தகராறு நடந்து கொண்டே இருந்தது. எங்களுக்கு வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, 1937இல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் தயாரித்தபோது டைரக்டர் வி.பி.வார் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்தோம், ராவ் செய்த அட்டூழியங்களே அந்த வார் என்னும் பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிக் காட்டி எங்கள் வயிற். றெரிச்சலைத் தீர்த்துக் கொண்டோம். சபையோர் அந்தக் காட்சியைப் பிரமாதமாக ரசித்தார்கள்.

டைரக்டர் பி.வி.ராவ் சாதாரணமாக எப்போதுமே நிதா னத்தில் இருப்பதில்லை. அரை மயக்கத்திலேயேதான் காரியங் களைச் செய்வது வழக்கம். அதே நிலையில் படத்தையும் டைரக்ட் செய்தார். நாங்கள் பம்பாயில் இருந்த அதே சமயத்தில் புளுவில் சந்திரகாந்தா, வசந்தசேனா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எல்லோரும் புனா சென்று ராஜாவைப் பார்த்து வந்தோம். டைரக்டர் ராவும் எங்களோடு ராஜாவைப் பார்க்க வந்திருந்தார். எல்லோரும் மகிழ்ச்சியோடு அளவளாவிக் கொண் டிருக்கும் நேரத்தில் டைரக்டர் ராஜா,

“டே பசங்களா, ராவ் ஒன்னும் தெரியாதவன்; அப்பாவி. நீங்கதான் கூட இருந்து படத்தை உருப்படியாச் செய்யனும்” என்று எங்களிடம் கூறினார். டைரக்டர் ராவிடம்,