பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325



“டே ராவ், பையன்களெல்லாம் நல்ல புத்திசாலிங்க. நீ சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடாதே. அவங்களோட ஒத்துழைச்சு படத்தை ஒழுங்கா எடுக்க முயற்சி பண்ணு” என்று கூறினார். ராஜாவின் வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல் இருந்தன.

பெருக் தோல்வி

பம்பாயில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்டையபுரம் அரண்மனைக் கொட்டகையில் கம்பெனிக்குப் புதிய காட்சிகள் தயாராகி வந்தன. பம்பாயில் எங்களுக்கு நிம்மதியே இல்லை. கம்பெனியின் வளர்ச்சிபற்றிக் கனவுகள் கண்டோம். மனத்திலேயே புதிய புதிய கோட்டைகளைக் கட்டினோம்.

அந்தேரி ராம்னிக்லால் மோகன்லால் ஸ்டுடியோவில் இரண்டு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. எப்படியோ படத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு திரும்பினோம். படத்தின் எடிட்டிங்'கின் போது சின்னண்ணா உடனிருப்பது நல்லதென எல்லோரும் எண்ணினோம். டைரக்டர் ராவ், பிடிவாதமாக மறுத்து விட்டார்.

நாங்கள் திரும்பிய இரண்டு மாதத்திற்குப் பிறகு பாலாமணி படம் மதுரையில் திரையிடப்பட்டது. நாங்கள் நால்வரும் போய்ப் பார்த்தோம். எங்களுக்கே மூளை குழம்பியது. எடுத்ததே மோசம். அதிலும் காட்சிகளை முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி ஒரே குளறுபடி செய்திருந்தார். பி. வி. ராவ். படத்தை முழுதும் பார்க்க மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வந்து விட்டோம். முதல் படம் மேனகா சிறந்த படமெனப் பரிசு பெற்றது. இரண்டாவது படம் பாலாமணி படுதோல்வி அடைந்தது.