பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340



கிருஷ்ணன் என்ற மூன்று சகோதரர்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். அவர்களில் கருணாகரன், அப்போது சின்னஞ்சிறுவராக இருந்தார்.அவர் வெண்ணெய் திருடும் கண்ணளுகத் தோன்றி அற்புதமாக நடித்தார். கோவிந்தராஜன் அப்போது கம்பெனி யின் குட்டி நகைச்சுவை நடிகராக விளங்கினார். இவருடைய மெலிவான உடலைக்கண்டு நடிகர் எல்லோரும் இவரைக் ‘காமா’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள். காமா என்ற பெயரோடு ஒரு பெரிய பயில்வான்-குஸ்தி வீரர் இருந்தாரல்லவா? அந்தப் பெயரால் இந்த எலும்புருவத்தை வேடிக்கையாக அழைத்தோம். இவர் கிருஷ்ணனோடு விளையாடும் ராமனாகத் தோன்றி எங்களையும், சபையோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். கே. ஆர். ராமசாமியும், தம்பி பகவதியும் பயங்கர கம்சனக நடித்தார்கள். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வேடம் புனைவார்கள். நகைச்சுவை நடிகர் சிவதானு நடன ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்பு காரைக்குடியில் கிருஷண லீலாவைத் தயாரித்தபோது பிரபல நடன ஆசிரியர் தர்மாஞ்சலு நாயுடு கம்பெனியில் இருந்தார். அப்போதே சிவதாணு நாயுடுவின் பிரதம மாணவராக விளங்கினார். இடையே நாயுடு கம்பெனியை விட்டுப் போய் விட்டதால் நடனப் பொறுப்பு முழு வதையும் அதன் பிறகு சிவதானுவே ஏற்றுக் கொண்டார். கிருஷ்ண லீலாவில் பல நடனங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சிவதானு சிரத்தையோடு சொல்லி வைத்தார். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நடிகர்கள் உற்சாகத்தோடு நடித்தார்கள். கிருஷ்ண லீலா நாடகம் எங்களுக்கு புது நம்பிக் கையை உண்டாக்கியது. இரண்டாவது கிருஷ்ணகை நடித்த இளைஞர் ஜெயராமனுக்கு நல்ல இனிமையான குரல்; திக்குவாய். பேசும் போது திக்கித் திக்கித்தான் பேசுவார். பாடும் போது மட்டும் அவர் திக்குவாய் என்பதே தெரியாது. அருமையாகப் பாடுவார். நன்முக நடிப்பார். எல்லோரும் சேர்ந்து கிருஷ்ண லீலா நாடகத்தைச் சிறப்பித்தார்கள். ஆம்பூர் நாடகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சித்துார் சென்றோம்.

சித்துரரில் தமிழ் நாடகம்

சித்தூர் அப்போது சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருந்தது. மொழிவாரி ராஜ்யம் பிரிக்கப்பட்டு ஆந்திரப்பிரதேசம் உருவான