பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342


இளைய தங்கையின் திருமணம்

அடுத்தபடியாக வேலூருக்கு வந்தோம். அங்கும் நல்ல வசூலாயிற்று. இராமாயணத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நாடகமே பலமுறை வைக்கப்பெற்றது. வேலூரில் இருந்த போது எங்கள் இளைய தங்கை காமாட்சியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்காகப் பெரியண்ணா நாகர்கோவில் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். வேலூர் நாடகம் முடிந்து திருவண்ணாமலை போவதாக முடிவு செய்யப்பட்டது. எல்லோரையும் திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். 1939ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாளையங்கோட்டையில் இளைய தங்கை செல்வி காமாட்சிக்கும் செல்வன் சண்முகசுந்தரம் பிள்ளைக்கும் திருமணம் நடந்தேறியது. என்னுடைய திருமணத்திற்கும் பெரியண்ணா இதையடுத்து ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இந்தச் சூழ் நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று உறுதியாகக் கூறி விட்டதால் அம்முயற்சி கைவிடப் பட்டது. தங்கையின்திருமணம் நிறைவேறியதும் நாங்கள் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.

மறுமலர்ச்சி நாடகாசியா மறைவு

திருவண்ணாமலையிலும் கம்பெனிக்குநல்லவசூலாயிற்று. அப்போதெல்லாம் நான் அடிக்கடி வெளியேபோய் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வேன். பெரியண்ணா இதுபற்றி வருத்தப்படுவதாக அறிந்தேன். “ஒன்று நாடகத்தில் முழுதும் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். அல்லது அரசியலிலேயே முழுநேரத்தையும் செலவிடவேண்டும். இரண்டுங்கெட்டானாக இருதுறை களிலும் காலை வைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று பெரியண்ணா கண்டித்ததாகக் கூறினார்கள். என்போக்கு தவறென்று எனக்குப் பட்டது. அன்று முதல் வெளியே பொது இடங்களில் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

திருவண்ணாமலையில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் எங்கள் அன்புக்குரிய வாத்தியார் கந்தசாமி முதலியார் காலமானதாகச் செய்திகிடைத்தது. 1939மார்ச்8ஆம்