பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351

351

பாடல்கள் எழுதியவர். எப். ஜி. என். தான் புலவரை அறிமுகப் படுத்திவைத்தார். கிறித்துவக் கதையாகிய ஞானசெளந்தரிக்கும் இந்து புராணக்கதையாகிய சிவலீலாவுக்கும் ஒரு முஸ்லீம் புலவர் பாடல் புனைந்தது குறிப்பிடத்தக்க செய்தியல்லவா? இதில் வியப்பென்னவென்றால் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் இவற்றையெல்லாம் புலவர் சையத் இமாம் நன்கு அறிந்திருந்தார். அவரோடு நெருங்கிப் பழகியபோது எளக்கு எங்கள் நாஞ்சில் நாட்டுப் பெரும் புலவர் கோட்டாறு சதாவ தாளம் செய்குத்தம்பிப் பாவலர்தாம் நினைவுக்கு வந்தார்.

சிவலீலா ஒரு புது விதமான நாடகமாக உருவாகியது. இறைவன் விறகு விற்ற படலத்தில் தமிழ் இசையின் சிறப்பு வலி யுறுத்தப் பெற்றது. தருமிக்குப் பொற் கிழி அளித்த படலத்தில் தமிழ் மொழியின் வளமையைச் சொல்ல வாய்ப்புக் கிட்டியது. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம் தந்திரக் காட்சிக்குரிய தாக இருந்தது. கால்மாறியாடிய படலம் சிவசக்தி கடனத்திற்கு ஏற்றதாக அமைத்தது. வலைவீசும் படலம் காதல்சுவை நிறைந்த பகுதியாக விளங்கியது. பெரிய புராணத்திலிருந்து திருக்குறிப்புத் தொண்ட நாயனரைச் சேர்த்துக்கொண்டோம். அஃது பக்தியின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகத் திகழ்ந்தது. ஆக நாடகம் பல்வேறு சுன்வகளைக் கொண்டதாகவும் பயனுடையதாகவும் அமைந்தது. நல்ல காட்சிகளும், உடைகளும் தயாரித்து நடத்தி னால் சிவiலா பொதுமக்களை ஈர்க்கும் நாடகமாக அமையு மென்பது நன்றாகப் புரிந்தது. நிலைமையைக் கருதி அவசியமான சிலவற்றை மட்டும் செய்து சிவலீலா நாடகத்தை 25-12-39 இல் அரங்கேற்றினோம். சிவசக்தி நடனத்திற்குப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை எப். ஜி. என். அவர்களின் மூத்தமகன் தியாகராஜன் ஏற்றுக்கொண்டார்.

நடனமாடும் சிவனுகவும், பார்வதியாகவும் கம்பெனியில் அப்போது முக்கிய பாத்திரங்களே ஏற்று நடித்து வந்த ஜெயராம னும், சோமசுந்தரமும் பயிற்சி பெற்றார்கள். இவ்விருவரும் மிகவும் திறமையாக ஆடினார்கள்.

சிவசக்தி நடனம், நாடகத்திற்குச் சிகரமாக அமைந்தது. எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்ட எப். ஜி. நடேசய்யர்