பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357


ஏ.சங்கரய்யா முதலிய நண்பர்கள் கலந்து கொண்டு என்னை வாழ்த்தினார். 8 ஆம் தேதி காலை புறப்பட்டுக் கோவை சேர்ந்தேன்.

கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி. சகஸ்ரநாமம் முதலியோர் என்னை அன்புடன் வரவேற்றார்கள். சகோதரர் சகஸ்நாமம் அப்போது என். எஸ்.கே. படக்கம்பெனியின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தார். அவர் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். நீண்ட காலம் பழகிய நண்பர்களோடு இருந்ததால் சகோதரர்களைப் பிரிந்த தனிமை உணர்வு எனக்கு ஏற்படவில்லை.

பி. எஸ். இராமையா

கோவைராயல் இந்து ரெஸ்டாரண்டில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கதாசிரியர் பி.எஸ். இராமையாவும் அங்கேயே தங்கியிருந்தார். நான் என் அறைக்குச் சென்றதும், “வாங்கோ மிஸ்டர் ஷண்முகம்” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “நான்தான் பி.எஸ்.இராமையா, பூலோகரம்பை கதையை நான்தான் எழுதுகிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர். பி.எஸ்.இராமையாஅவர்களோடு அதுதான் எனக்கு முதல் சந்திப்பு. அவருடைய அற்புதமான சிறுகதைகளை மணிக்கொடியில் நிறையப் படித்திருக்கிறேன். பூலோகரம்பைக்கு அவர் வசனம் எழுதுகிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ந்தேன். இருந்தாலும் அவர் இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. பிரபலமான ஒர் எழுத்தாளர் என் அறைக்கே வந்து, என்னை வரவேற்றது, அவருடைய எழுத்தில் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. நானும் பி.எஸ்.இராமையாவும் நெடுநாளைய நண்பர்களைப் போல் மனம் விட்டுப் பேசினோம். நெருங்கி உறவாடினோம்.

பாடலாசிரியர் ஆனை வைத்தியநாதய்யரும் எங்களோடு தங்கியிருந்தார், நான் போன மறுநாள்பாட்டு ஒத்திகைநடந்தது. டி.ஆர்.மகாலிங்கமும் நானும் பாடினோம். படத்தில் எங்க ளோடு என். எஸ். கே. டி. ஏ. மதுரம், கே, எல். வி. வசந்தா,