பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணாவின் விமரிசனம்

கம்பெனி ஈரோடு சென்றது. அங்கும் குமாஸ்தாவின் பெண் வெற்றிகரமாக நடைபெற்றது. ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்கள் அனைவரும் நல்ல முறையில் பாராட்டி நாடகம் திரைப்படமாக வந்து அமோக வெற்றி பெறவேண்டுமென்று வாழ்த்தினார். அறிஞர் அண்ணா அவர்கள் “விடுதலை”யில் இந்நாடகத்திற்கு ஓர் அருமையான இலக்கிய விமர்சனம் எழுதினார். அதன் தொடக் கத்தில் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“வனிதைகளை மணந்து வாழ்வதென்றாலே வெறுப்புக் கொள்ளும் வேதாந்தி! கண்டவர் கனியோ, மணியோ எனக் கூறி கட்டி யணைக்க விரும்பும் கட்டழகு படைத்த இருமங்கைகள்! கூனோ குருடோ-எவனோ ஒருவன் வரமாட்டான, வயதுக்கு வந்துவிட்ட பெண்னைக் கட்டிக் கொண்டு சாதியாசாரம் கெடாதபடி, பழி வராதபடி, தடுத்து ஆட்கொள்ள மாட்டான என்று சதா கவலைப் படும் தந்தை; சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவரது மனைவி; அவர்களின் இணை பிரியாத் தோழன் வறுமை; உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சியம் என எண்ணி வாழும் செல்வச் சீமான்; அவனது உதவி இருக்கும் போது வீட்டைப்பற்றிக் கவலை எதற்கு என்று எண்ணாம் இளங்காளை; காளையைக் சுற்றிலும் கண் சிமிட்டிக் கையசைத்துக் காலம் தள்ளும் காரிகைகள்; அத்தகை யோரைக் கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெற முடியும் என எண்ணாம் சினிமா டைரக்டர்; இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச் சுருட்டி வாழும் சில அந்தணர்கள்!

“குமாஸ்தாவின் மகள்” என்னும் நாடகத்தில் வரும் பாத்திரங்கள் இவைகளே. குடும்பபாரம்; வறுமையின் கொடுமை