பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365


போன்’ இருந்தும் பேச முடியாத பரிதாபம். இப்படி எத்தனே, எத்தனையோ தொல்லைகள்!

ஒய்வின்றி உழைத்தோம்

‘ரீ டேக்’ எடுக்காத படமென்றுதான் எங்கள் படத்தைச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? எடுத்த படத்தை உடனே போட்டுப்பார்க்க வசதியில்லை. ஒருவகையாய் சரிப்படுத்தி ‘ரஷ் பிரின்ட்’ போட்டுப் பார்க்க முயல்வோம். அதற்குள் ‘செட்டிங்’ மாறிவிடும். இதனால் அவசியம் என்று கருதப்பட்ட கட்டங்களைக் கூட மறுமுறை எடுக்கவில்லை. எப்படியாவது மானம் போகாமல் படம் முடிந்தால் போதும் என்ற நிலையிலேயே படத்தை முடித். தோம். எங்கள் மூன்று மாதத் திட்டத்தில் படம் முடியவில்லை. கோவை முடிந்து கள்ளிக்கோட்டை, பாலக்காடு ஆகிய ஊர்களில் நாடகத்திலும், படத்திலுமாக ஒய்வின்றி உழைத்தோம். அவ்வாறு உழைப்பதிலேயே இன்பம் கண்டோம், நாங்கள் நடிகர்களாக இருந்தமையால்தான் படம் முடிந்தது என்று சொல்லலாம். பட அதிபர்களுக்கு மட்டும் எங்கள் நிலை ஏற்பட்டிருந்தால் படப்பிடிப்பை விட்டுவிட்டு ஓடியிருக்க வேண்டியதுதான். இது தற்புகழ்ச்சியல்ல. உண்மை.

இயக்குநர் கே. வி. சீனிவாசன்

குமாஸ்தாவின் பெண்படம் எடுப்பதற்கு சீனரியோ தயாரித்ததோடு அஸோஸியேட் டைரக்டராகவும் இருந்துபடத்தை முடிப்பதற்கும் பெருந்துணையாக இருந்தவர் கே.வி.சீனிவாசன், இவர் எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். படம் நல்லமுறையில் வெளிவர இதயபூர்வமாக உழைத்தவர்களில் இன்று பிரபல டைரக்டர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன்-பஞ்சு இவ்விருவரையும் குறிப்பிட வேண்டும். பஞ்சு படத்திற்கு எடிட்டராகவும் கிருஷ்ணன் ‘லேபரட்ரியின்’ முதல்வராகவும் இருந்து அவ்வப் போது எங்களுக்கு அரிய யோசனைகளைக் கூறி ஒத்துழைத்தார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப்படம் என்ற உணர்விலேயே நடித்தனர்.