பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் திருமணம்

8- 4- 41இல் மதுரையில் ‘இராமாயணம்’ நாடகம் தொடங்கினோம். அடுத்துக் குமாஸ்தாவின் பெண் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் தொடர்ந்து நடைபெறும் சமயத்திலேயே மதுரை சென்ட்ரல் டாக்கீசில் குமாஸ்தாவின் பெண்படமும் திரையிடப்பட்டது. நாடகம், படம் இரண்டுக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தன.

எங்கள் மனப்படி படம் சிறப்பாக வெளிவரவில்லை, என்றாலும் தமிழ் மக்களின் பாராட்டுக்குறித்தான படமாக இருந்தது. தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கைகளெல்லாம் படத்தைப் பாராட்டி எங்களுக்கு நல்வாழ்த்துக் கூறின. அறிஞர் அண்ணாவும் விடுதலையில் ஒருஅருமையான மதிப்புரை எழுதியிருந்தார் “நல்ல ஸ்டூடியோவும் திறமையான டைரக் ஷனும் இருந் திருந்தால் ‘குமாஸ்தாவின் பெண்’ இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியிருக்கும்” என்று பம்பாயின் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான ‘பிலிம் இந்தியா’ விமர்சனம் எழுதியிருந்தது. பாராட்டுக்கு முக்கிய காரணம் கதையமைப்புத்தான் குமாஸ்தாவின் பெண் படத்தினால் கம்பெனிக்குத் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் கிடைத்தது. எங்கள் உழைப்புக்குக் கிடைத்த லாபம் அதுதான் என எண்ணி மன நிறைவு பெற்றோம்.

புராணப் படங்கள் ஒரளவு தோல்வியடைந்தாலும் போட்ட பணத்திற்கு மோசமில்லை. சமூகப் படங்கள் அப்படி யல்ல; பெரும் வெற்றி பெற்றால்தான் சிறிதாவது லாபம் கிடைக்கும். இதுதான் அன்றைய நிலை. இனி, எவருடைய கூட்டுறவுமின்றிப் படம் பிடிக்க முடிந்தால் அதில் ஈடுபடுவது;

எ. நா-24