பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்


சிவலீலா தொடர்ந்து நடைபெற்றது. 100வது நாள் விழாவுக்கு குமாராஜா எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமை தாங்கிப் பாராட்டினார். “என் தந்தையார் தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே டி. கே. எஸ். சகோதரர்கள் இந் நாடகத்தில் தமிழ் இசையை நல்ல முறையில் பரப்பிப் பிரச்சாரம் செய்து வருவது குறித்துப் பாராட்டுகிறேன்.” என்று கூறினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் பெருமக்கள் அனைவரும் வந்து நாடகத்தைப் பார்த்தார்கள். தமிழ் சங்கத் துணைத் தலைவர் சீனிவாச ஐயங்காரும் தலைமைப் பேராசிரியர் திரு நாராயண ஐயங்கார் சுவாமிகளும் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஜெகவீர பாண்டியனார், கார்மேகக் கோனார் முதலிய பெரும் புலவர்களும் 108ஆவது நாள் வருகை புரிந்து எங்களைப்பாராட்டி முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம் என்னும் பட்டத்தையும், சங்கத் தலைவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் கையெழுத்திட்ட பெரிய பத்திரத் தையும் அளித்தனார்.

அன்று அந்த மாபெரும் புலவர் பெருமக்கள் மேடைமீது நின்று வாழ்த்திப் பாடிய பாடல்களிலும் மனமுவந்து வாழ்த்திய உரை மணிகளிலும் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாச்சாலை ஆசிரியர்
சு. நல்ல சிவன்பிள்ளை அவர்கள்

பரதவன்றன்வடிவாகி வலேகைக் கொண்டு
பகர றிய மீன்படுத்தும் பரிவிற் செய்த
புரதகனன் விளையாட்டும், அவன்றன் கூத்தும்,
புவனமெல்லாம் ஈன்ற சக்தி புரியும் கூத்தும்,