பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388


பின்பற்றி நாடகத்திற்குப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டோம். கடைசி நாளன்று சிவலீலா நாடக நூலும் வெளியிடப் பெற்றது.

சிவலீலா வெற்றிக் களிப்பில் சின்னண்ணா ராஜாபர்த்ருஹரி நாடகத்தை எழுதித் தயாரித்தார். பர்த்ருஹரிக்காகவும் பல புதிய காட்சிகள் தயாரிக்கப்பெற்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ராணி அந்தப்புரம், நந்தவன மாடி, குதிரை லாயம் முதலியனவாகும். 1941 டிசம்பர் 7 ஆம் தேதி நாடகம் அரங்கேறியது. பகவதி பர்த்ருஹரியாகவும், கலைஞர் நாகராஜன் இராணி மோகனவாகவும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி விக்ரமனுகவும், எம். எஸ். திரெளபதி சரசாவாகவும், நான் குதிரைக்காரனாகவும், சிவதாணு என்கையாளாகவும் நடித்தோம். இந்நாடகத்தில் என் மனதிற்கு பொறுத்தமான வேடம் கிடைத்தது. நடிப்புத் திறமையை நன்கு வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நாடகம் இது. நான் என் துணைவியோடு தனியே வாழ்ந்த இன்ப நாட்களல்லவா? அவள் இந் நாடகத்தைத் தொடர்ந்து பலமுறை வந்து பார்த்தாள். கலைஞர். ஏ. பி. நாகராஜனுடன் நான் நடிக்கும் காதல் காட்சிகளைக் கண்டு என்னோடு ஊடினாள். உண்மையில் நாகராஜன் அவள் கண்களுக்குப் பெண்ணாகவே காட்சி அளித்தார். பெண்களுக்குரிய நடை, நளினம், குழைவு, நெளிவு, குரல், கொடிபோன்ற உடல் அனைத்தும் நாகராஜனிடம் அந்த நாளில் பூரணமாக அமைந்திருந்தன. ராஜா பர்த்ரு ஹரியோடு மோகன செய்யும் சாகசமும், தன் உள்ளம் கவர்ந்த அஸ்வபாலைேடு அவளுக்கிருந்த அளவற்ற ஆசாபாசமும், கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்துக் கண்டித்த விக்ரமன் மீது அவளுக்கு ஏற்படும் வெறியும், இறுதியில் கணவனை எதிர்த்து நின்று எழுச்சியோடு பேசும் பேய்க் குணமும் கலைஞர். ஏ.பி. நாகராஜனின் திறமையான நடிப்பில் நன்கு வெளிப்பட்டன. ராஜா பர்த்ருஹரி தொடர்ந்து இருபத்தி ஐந்து நாட்கள் நல்ல வசூலுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.