பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

391


தாங்களே நடிக்க வேண்டும்!

சின்னண்ணா, வேடம் புனைவதை நிறுத்திச் சில ஆண்டுகளே ஆயின. ஆனால், இறுதிவரை பெண் வேடங்களிலேயே நடித்தவர். எப்போதாவது மேனகா நடைபெற நேர்ந்தால் அவர்தாம் பெருந்தேவியாக நடிப்பார். அண்ணாவின் நடிப்புத் திறமையில் எனக்குப் பூர்ண நம்பிக்கை இருந்தது. அவரை எப்படியாவது சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அவர் இதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று தெரியும். எனவே பெரிய பீடிகை போட்டிக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

“அண்ணா, நாடகத்தில் தமிழ்ச் சுவை முக்கியம். பாடும் போதும், பேசும்போதும் வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டால் நாடகமே நன்றாக இராது. எல்லாக் காட்சிகளிலும் ஒளவையார் வரவேண்டியிருக்கிறது. அனைத்தும் அறிவுரைகளாகவே நிறைந்திருக்கின்றன. ஒளவையாராக நடிப்பவர் மிகத் திறமையாக நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான்கு மணி நேரம் கிழவியையே பார்த்துக்கொண்டு சபையோர் நாடகத்தை ரசிக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினேன்.

“அது சரி,எதற்காக இவ்வளவு பீடிகை?” என்றார் அண்ணா.

“தயவு செய்து ஒளவையார் வேடத்தைத் தாங்களே புனைய வேண்டும். நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானல் இதைத் தவிர வேறு வழியில்லை” என்று அழுத்தமாகத் தெரிவித்தேன். அருகிலிருந்த நடிக நண்பர்களும் இதனை மகிழ்வோடு ஆமோதித்தார்கள். சின்னண்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தார். “சேச்சே, என்னால் முடியாது. அந்தக் காலம் போய் விட்டது” என்றார். இதைச் சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் விடவில்லை. மேலும் உற்சாகத்தோடு பேசினேன். ஒளவையாராக நடிப்பவர் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் வைக்கவேண்டும்; எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பனவற்றை விரிவாக எடுத்து மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டே போனேன். திடீரென்று இடைமறித்து, “ஏண்டா,