பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இல்வாழ்வில் இன்பம்

குடந்தை வாணி விலாச சபைத் தியேட்டரில் நாடகம் தொடங்கினோம். மதுரையில் மகத்தான வெற்றி பெற்ற சிவலீலாவையே முதல் நாடகமாக நடித்தோம். அமோகமான ஆதரவு கிடைத்தது. சிவலீலாவே தொடர்ந்து நடைபெற்றது. ஏதேதோ இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்த என் மனைவி மீனாட்சியிடம் ஒய்வாக இருந்து உரையாடி மகிழக் குடந்தையில் தான் எனக்கு நேரம் கிடைத்தது. திருமணம் முடிந்தவுடனேயே சிவலிலா நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஏறத்தாழ ஒரு வாரம் என் இல்லத்தரசியின் வீட்டில், சேலம் செவ்வாய் பேட்டையில் தங்கியிருந்தேன். என்றாலும், என் நினைவெல்லாம் சிவலீலாவின் வெற்றியிலேயே குறியாக இருத்தது. மறு வீடு சென்று மனைவியின் வீட்டில் இருந்த போதும் நாடகத்திற்குத் தேவையான குறிப்புகளை எழுதுவதிலேயே பெரும் பொழுது கழிந்தது. மனைவியின் வீட்டில் வரவேற்புக்கும் உபசாரத்திற்கும் குறைவில்லை. அவருடைய தமக்கையும் தங்கை சரசுவும் என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார். எனக்கோ இருக்கை கொள்ளவில்லை. மனைவியுடன் மதுரைக்குத் திரும்பினேன். இரவு நாடகமாதலால் பகல் வேளை உணவுக்குப் பின் சற்று உறங்குவேன். மாலையிலேயே கொட்டகைக்குப் போய் விடுவேன். நாடகம் முடிந்து வீடு திரும்ப இரண்டு மணி ஆகிவிடும். அதற்குமேல்தான் அன்பு மனே யாளுடன் அளவளாவி மகிழ நேரம் கிடைக்கும்.

மீனாட்சியக்காளின் அன்பு

எங்கள் குடும்ப உறவினார்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு கூறுவது இன்றியமையாததாகும். எங்கள் தந்தை வழிப் பாட்டனார் திரு சங்கரமூர்த்தியா பிள்ளை திருவனந்தபுரம் புத்தன்