பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399


சந்தையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தவர். அவர் ஓர் ஆசிரியர். சொந்தத்தில் ஒரு தொடக்கப் பள்ளியினையும் நடத்தி வந்தார். இளம் பருவத்தில் மரத்திலிருந்து விழுந்து காலில் ஊனம் ஏற்பட்டதன் காரணமாக அவரை எல்லோரும் நொண்டி அண்ணாவி என்றே குறிப்பிடுவார்கள். அவருக்கு இரு மனைவியர்; இரண்டாவது மனைவியின் பெயர் முத்தம்மை. அந்த அம்மையாரிடம் பிறந்த்வர்கள் சண்முகம்பிள்ளை, கண்ணாசாமிப்பிள்ளை, செல்லம் பிள்ளை ஆகிய மூவர். இவர்களில் சண்முகம்பிள்ளை எங்களுக்கு அறிவு தெரியுமுன்பே காலமாகி விட்டார். பாட்டனாருக்கு முதல் மனைவியிடம் பிறந்தவர் திரு சுந்தரம்பிள்ளை. அவரது மனைவி தாயம்மையிடம் பிறந்தவர்கள் செல்லம்மை, திரவியம்பிள்ளை, மீனாட்சியம்மை, இராமலிங்கம்பிள்ளை ஆகிய நால்வர். எங்களின் ஒன்றுவிட்ட சகோர-சகோதரியரான இவர்கள் நாகர்கோவிலிலேயே வசித்து வந்ததால்தான் எங்கள் அன்னையார் நாகர் கோவிலில் நிலம் வாங்கவும், அதனையே நிரந்தர இருப்பிடமாகக் கொள்ளவும் நேர்ந்தது. எங்களுக்கு அறிவு தெரிந்தபின் 1924இல் நாங்கள் முதல் முறையாக நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்னையார் முலம் இவர்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். இவர்களில் மூத்த அண்ணா திரவியம்பிள்ளை, கம்பெனியில் சில காலம் மானேஜராகவும் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இளையவர் இராமலிங்கம்பிள்ளை வக்கீல் குமாஸ்தா. எங்களிடம் பாசமும் பரிவும் கொண்டவர். இவரோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். மீனாட்சியக்காள் என்மீது மிகுந்த அன்புடையவர். இவருடைய மூத்த மகன்தான் நகைச்சுவை நடிகன் சிவதாணு. எனக்குத் திருமணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே திரவியம்பிள்ளையின் மூத்த மகள் சுந்தரிக்கும் சிவதாணுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இருந்த மன ஒற்றுமையை அறிந்த நான், இவர்கள் திருமணத்தை வற்புறுத்தி, அண்ணாவையும் அக்காளேயும் சம்மதிக்க வைத்தேன். என் திருமணத்திற்காக உறவினார்கள் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தபோது இந்த ஏற்பாடுகளெல்லாம் நடைபெற்றன. என் திருமணத்தைக் காண வந்திருந்த மீனாட்சியக்காள், நான் மனைவியுடன் தனிக்குடித்தனம் தொடங்கியதும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரண