பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412


அவர்களே “அடுக்குச் சொல் வீரர்” என அடைமொழி கொடுத்து அழைக்கின்றனார். இவரது எழுத்தின் வேகம் படிப்பவர் மூளையைப் பண்படுத்தி, புதைந்து கிடக்கும் பகுத்தறிவைத்துருவி எடுக்கும் தன்மை வாய்ந்தது. எந்த இலக்கியமும் மனித சமூகத்திற்குப் பயனளிக்கும் பான்மையதாய் இருக்க வேண்டுமென்பதை தோழர் சி. என். ஏ. அவர்கள் நன்றாய் அறிந்தவர். அதன்படியே தொண்டாற்றியும் வருபவர்.

இவரது உள்ளச் சோலையிலேயே பூத்த நறுமண மலர்தான் “குமாஸ்தாவின் பெண் என்ற கொலைக்காரியின் குறிப்புக்கள்.”

உயிருள்ள சித்திரம்; அறிவுக்கு விருந்து: கற்பனே ஒவிய மல்ல; இன்று நம் கண்முன் நிகழும் காட்சி.

எங்கள் நாடக குமாஸ்தாவின் பெண் ணின் பிற்பகுதியை தமது கருத்திற்கேற்பச் சிறிது மாற்றி எழுத, தோழர் சி. என். ஏ அவர்கள் விரும்பினார். ஆவலுடன் அனுமதி அளித்தோம்; தமது ‘திராவிட நாட்டில் வெளியிட்டார், படித்தோம். இவ்வரிய சித்திரத்தை வரைய எங்கள் ‘குமாஸ்தாவின் பெண்’ திரையாக இருந்தது என்பதை யெண்ணும் போது உண்மையிலேயே பெருமையடைகிறோம்.

தமது உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பெருக்கின, தோழர் அண்ணாதுரை அணை போட்டுத் தடுத்து, சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் வாரியிறைத்திருக்கிறார் கதையில் —

"கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கணியாததால் வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற, ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று அவனேக் கொன்ற காந்தாவின் கதை இதுவே”

என்று தோழர் அண்ணாதுரையே இக்கதைச் சுருக்கத்தை, அழகாகக் கூறி முடிக்கிறார். வெறும் கதையை ரசித்தால் போதாது. அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர வேண்டும்.

கதாபாத்திரங்களின் மனோ நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதில் தோழர் சி. என். ஏ. எவ்வளவு திறன் படைத்துள்ளார் என்பதை