பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரு பெரும் கலைஞர்கள்


ஒருநாள் பாலக்காட்டில் இராமாயணம் நடந்தது. கே. ஆர். இராமசாமி வழக்கம்போல் ஆஞ்சநேயராக நடித்தார். அருமையாக பாடினார். முற்பகுதிக் காட்சிகள் முடிந்தன. இனி ஆஞ்சநேயர் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு தாண்டுவதற்கு அப்போதெல்லாம் வெறும் அட்டையில் செய்த அனுமாரை இழுப்பது வழக்கமில்லை இராமசாமியே மேலிருந்து தொங்கும் நான்கு வளையங்களில் கை கால்களை துழைத்துக்கொண்டு கடலைத் தாண்டுவார். பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருக்கும். அன்று இராமசாமி அங்கதன் ஜாம்பவான் முதலிய வானர வீரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கடல் தாண்டப் புறப்பட்டார். “ராம ராம ராம சீதா” என்ற வானர வீரர்களின் ராம நாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. இராமசாமி உள்ளே வந்தார். குதிரை ஏணிமேல் ஏறித் தொங்கிக் கொண்டிருந்த நான்கு வளையங்களில் கைகளையும் கால்களையும் நுழைத்துப் பாய்ந்து செல்வது போல் ஒரு கையையும் காலையும் முன்னல் நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்தார். எதிர்ப்புறமிருந்து குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்தார்கள். கம்பிகள் மிகச்சிறியவை. சபையோர் கண்ணாக்குத் தெரியாது. ஆகையால் இராமசாமி பாய்ந்தபடியே கடலைத் தாண்டி எதிர்ப்புறம் செல்லும் போது ஒரே கரகோஷம். திரை விடப்பட்டது. மீண்டும் குறுக்குக்கம்பியை முன்னிருந்த இடத்திற்கே இழுத்தார்கள், கம்பி மேடையின் நடுவே வந்ததும் மேலே கட்டப் பட்டிருந்த குறுக்குக் கம்பி படாரென்று அறுந்து விட்டது. ஆஞ்சநேயர் அப்படியே கீழே விழுந்தார். எல்லோரும் பதறிப் போய் ஒடினோம். நல்ல வேலையாகக் கீழே வரிசையாகக் கட்டப் பட்டிருந்த கூர்மையான மரத் துண்டுகளோடு கூடிய அலைகளின் மேல் விழவில்லை. இரு அலைகளின் நடுவே விழுந்தார். குப்புற