பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

433


எல்லோரும் பாராட்டிப் பேசிய பிறகு நன்றி கூற வந்த அண்ணா எங்களைப் பாராட்டினார். முத்தமிழ்க்கலா வித்துவ ரத்தின டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக அரங்கில், அவர்களுடைய அற்புதமான காட்சிகளோடு நடிக்க எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பினை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம், நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறுவதற்குரிய வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதற்கெல்லாம் டி.கே. எஸ். சகோதரர்களின் நடிப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறினார் .

அவருடைய அந்த நன்றியுரை எங்களுக்குப் பாராட்டாக அமைந்ததோடு அறிஞர் அண்ணா அவர்கள் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கியது.

நாடகம் கேட்டேன்

சந்திரோதயம் முடிந்த மறுநாள் நாங்கள் அண்ணாவிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டேன்.

‘சந்திரோதயம்’ போன்ற அப்பட்டமான பிரசார நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது. எங்களைப் போன்றவர்கள் நடிக்க இயலாத கருத்துக்கள் இந்த நாடகத்தில் இருக்கின்றன. எனவே, பொதுவான சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை வைத்து ஒரு நாடகம் எழுதித்தாருங்கள்; நடிக்கிறோம்” என்றேன். விரைவில் எழுதித் தருவதாக வாக்களித்தார் அண்ணா. ஆனால் அந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமிக்குக் கிடைத்தது. அவற்றைப் பின்னல் கூறுவேன். இரு குழுவினருக்கும் பாராட்டு

அன்று மாலை 20-11-48 இல் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தார்க்கும் எங்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையார்க்கும் கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் சார்பில் ஒரு தேநீர் விருந் தும் பாராட்டும் நடைபெற்றன. இருகுழுவினரும் கலந்து கொண்டனார். பெரியார், பெருமாள் முதலியார் எம். ஏ.எல். டி. பழைய