பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

455


“இன்று நடத்தப்படும் நாடகங்கள் பெரிதும் புராணங்கள். இவைகளைக் காண்பதால் மக்களுக்கு என்ன பயன் உண்டு? மூடப் பழக்க வழக்கங்கள் வளரத்தானே இந்த நாடகங்கள் பயன்படுகின்றன. சமூக சீர்திருத்த நாடகங்களையே நாடகக்காரர்கள் பெரிதும் நடத்த வேண்டும். அதுதான் கலை அபிவிருத்தி. இந்த உணர்ச்சி இன்று எங்கும் பரவியிருக்கிறது. பொதுமக்களும் இனி நாடு சீர்திருத்த நாடகங்களையே காண விரும்புகிறது என்பதை நாடகக்காரர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

அண்ணா மேலும் தொடர்ந்து பேசுகையில், காலையில் தலைவர் கூறிய சில கருத்துகளுக்கு விடையளித்தார். தலைவர் ,ேப ச் சிலே அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லையாதலால் அவற்றுக்களித்த பதில்களையும் குறிப்பிடாமல் விட்டேன். முன் கூறியபடி ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் நூலில் இவ் விரிவுரைகளைக் காணலாம்.

இதன் பிறகு ஸ்ரீ மங்கல பாலகான சபையின் சார்பில் கே. டி. சந்தானம் அவர்கள் நடிகர் வாழ்க்கை என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினார். நாடகக் கலை பற்றி முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களும், நடிகர்களின் கடமை என்னும் தலைப்பில் கலைஞர் எம். எம். சிதம்பரநாதன் அவர்களும், நாடகக்கலை வளர்ச்சி பற்றி பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்களும், நடிப்புக் கலையில் இன்பம் என்பது பற்றி இலங்கை ஏ. கே. இராமலிங்கம் அவர்களும் சீர்திருத்த நாடகங்கள் என்னும் தலைப் பில் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்களும், ஒழுக்கம் வேண்டும் என்பது பற்றிச் சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை அவர்களும் பேசினார்கள்.

கடைசியாகத் தலைவர் தமது முடிவுரையில் கீழ் வருமாறு குறிப்பிட்டார்.

“நான் இந்த மகாநாட்டுக்குக் காலையிலே வந்ததும் சில பேர் என்னிடம் வந்து, இந்த மகாநாட்டிலே ஏதோ கலகம் விளையப் போவதாகவும் மகாநாடு கலைக்கப் பட்டுவிடப் போவ தாகவும் சொன்னார்கள். “யார் இவ்விதம் செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சிலருடைய பெயரைக் குறிப்பிட்டார்கள். உடனே நான், அப்படியெல்லாம் அவர்கள்