பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

457


நாடக உலகில் முதலிடம் பெற்று விட்டார்கள் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.

கலைவாணர் என். ஏஸ். கிருஷ்ணன் எதிரே அமர்ந்திருந்தார். அவர்மிகுந்த உணர்ச்சியோடு தாமே மேடைக்கு வந்து,

“இரண்டொரு வார்த்தைகளாவது இதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னல் முடியவில்லை. சர்.சண்முகம், டி.கே. ஷண்முகத் திற்கு ஒளவை’ என்றபட்டம் அளித்தது முற்றிலும் பொருந்தும். நான் சமீபத்தில் ஒரு மலையாள நாடகத்திற்குத் தலைமை வகித்த போது, மலையாள நடிகர்களைப்போல் தமிழ் நடிகருலகில் எவரும் இல்லையென்று கூறினேன்.அதை இன்று ‘வாபஸ்’ பெற்றுக்கொள்கிறேன். எனது சகோதரன் ஒளவை சண்முகம் ஒருவராலேயே தமிழ் நாடகக்கலை வளர்ந்தோங்குமென்று உறுதியாய்க் கூறுகிறேன்.

என்று உணர்ச்சி பொங்கக் கூறி என்னைத் தழுவிக் கொண் டார். நான் எல்லோருக்கும் நன்றி கூறும்போது, குழப்பம் கலகம் எதுவுமில்லாமல் மாநாடு அமைதியாக நடந்தது குறித்து இறைவனுக்கு நன்றி கூறினேன்.

முதல் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியமைக்காகச் செயலாளர்கள் இருவரையும் எல்லோரும் பாராட்டினார்கள். மாநாடு முடிந்தபின் அடுத்தவாரம் வெளி வந்த குடியரசு இதழில் நாடகக் கலை மாநாடு பெருந்தோல்வி அடைந்ததாகச் செய்தி வெளிவந்தது. அதே வாரத்தில் காஞ்சி புரத்திலிருந்து வெளிவந்த அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழில் நாடகக் கலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகச் செய்தி வந்திருந்தது. இரு பத்திரிக்கைகளையும் படித்து நாங்கள் சிரித்தோம்.