பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

485


“தாராளமாக, எப்படி வேண்டுமானலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.” இது வை. சு. ச. வின் பதில், மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே எழுந்து நின்றார். வை. சு. ச. வுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன்? ஏதாவது தேவையானால் வாங்கி வரச் சொல்கிறேனே?” என்று அவரும் எழுந்தார். அதற்குள் கண்மூடித் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்ந நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூருகக் கிழித்துப் போட்டு விட்டார். வை. சு. ச. வுக்கு ஒரே வியப்பு. “ஏனய்யா கிழித்தீர்?” என்று கேட்டாராம். “என் நோட்டை நான் என்ன வேண்டுமானலும் செய்வேன். உமக்கென்னேயா அக்கறை?” என்று சொல்லிக் கொண்டு கலகலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைக் சொல்லிவிட்டு, மேதைகளான கவினார்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்கு பாதியாவது இருக்குமல்லவா?” என்றார்.

நான் செட்டியாரிடம் விடைபெற்றுப் பள்ளத்துTர் சென்றேன். பள்ளத்தூர் வந்த கவினார் நான் வந்திருப்பதைச் கேள்விப் பட்டு நச்சாத்துப் பட்டிக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது; கடைசியாகப் போன ஊரில் பாரதிதாசன் என்னைத்சந்திக்க விரும்பாமல் பாண்டிசேரிக்கே காரில் போய் விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் பல இடங்களில் அலைந்து அலைந்து அலுத்துப்போய் ‘இது மேதைகளின் இயல்பு’ என்று கவிஞரைப் பார்க்காமலை காரைக்குடிக்குத் திரும்பினேன். கடைசியில் பில்ஹணன் நாடக நூலில் நான் நினைத்தபடி புரட்சிக் கவிஞரின் இரு பாடல்களைச் சேர்க்க முடியவில்லை.

“புரட்சிக்கவினார் பாரதிதாசன் அவர்களின் புரட்சிக்கவியிலுள்ள கருத்துக்கள் சில இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளன. கவினார் அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப் பட்டிருக்கிறோம்” என்று மட்டும் என்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டேன்.

புரட்சிக் கவினார் நிதிக்கு நாடகம்

திருச்சிக்கு வத்தபின் (சிவலீலா நடந்து கொண்டிருக்கை யில் கவிஞரோடு கடிதத் தொடர்பு கொண்டேன். “திருச்சியில்