பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488


கல்கியின் மேதைப் பண்பு

அதன்பின் கல்கி அலுவலகம் சென்று ஆசிரியர் திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்தேன். சுபத்திரையின் சகோதரன் சிறுகதையை நாடகமாக்கித் தரும்படியாக வேண்டி னேன். கல்கி சிரித்துக் கொண்டே சொன்னார். “மிஸ்டர் ஷண்முகம், கிருஷ்ணமூர்த்தி என்ன, சகலகலாவல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நாடகம் எழுதவராது. உங்களுக்குப் பிடித்தமான நாடக எழுத்தாளர் யாரையாவது எழுதச் சொல்லுங்கள். அந்த எழுத்துப் பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் சரி பார்த்துக் கொடுத்து விடுகிறேன்.”

என்றார் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் கல்கி. எந்த எழுத் தாளர் இப்படித் தன் திறமையைக் குறைத்துக் கொண்டு சொல்வார்! மாமேதை கல்கிக்குத்தான் அந்தத் துணிவு இருந்தது. இப்படித் தைரியமாகத் தன்னைப் பற்றி ஒப்புக்கொள்ளவும் ஒரு தனிப் பண்பு வேண்டுமல்லவா?

கல்யாணி ராமசாமி இணைப்பொருத்தம்

அன்றிரவு என்னெஸ்கே நாடக சபையின் ஸ்ரீ கிருஷ்ணலீலா ஒற்றைவாடையில் நடைபெற்றது. ஒவியர் மாதவன் அவர்களின் ஒப்பற்ற கைவண்ணத்தைக் கண்டு களித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவல்லவா? அன்று மீண்டும் அவர் படைத்த அற்புதக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். கே. ஆர். இராமசாமி ஸ்ரீ கிருஷ்ணனாகவும், செல்வி கல்யாணி ருக்மணியாகவும் நடித்தார்கள். இருவரையும் மேடையில் பார்த்த போது இணைப்பொருத்தம் பிரமாதமாக இருந்தது. நாடகம் முடிந்ததும் கம்பெனி வீட்டி லேயே தங்கும்படி சகஸ்ரநாமம் கூறினார்.

மறுநாள் காலை ஆசிரியர் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனோடும் மற்றும் பழைய நண்பர்களோடும் பேசிக் கொண்டிருந்தேன். அப் போது கே. ஆர். இராமசாமிக்கும் செல்வி கல்யாணிக்கும் விரை வில் திருமணம் செய்து வைத்து விடுமாறு கூறினேன். ராமசாமி யும் என்ைேடு இருந்தார். அவருக்கும் அந்த எண்ணம் இருப் பதை எல்லோரும் உணர்ந்தோம். என். எஸ்.கே. சிறையிலிருந்து வந்ததும் அப்படியே நடத்திவிடாலாமென்றார் முத்துகிருஷ்ணன்.