பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தமான் கைதி

ஒளவையார் நாடகம் நடந்து கொண்டிருக்கும்பொழுது கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நான் நாடக அரங்கில் என்னைச் சந்தித்தார். 1941இல் என்ன மதுரையில் சந்தித்து ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததாகவும் நினைவு படுத்தினார். ‘எனக்கு நினைவிவில்லை, மன்னியுங்கள்’ என்றேன். “இல்லை, பாதகமில்லை. அந்த நாடகத்தையே இப்போது அச்சுவடிவில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்றார். நாடக நூலை வாங்கி முதல் பக்கத்தைப் புரட்டினேன். கலை மன்னன் ராஜா சாண்டோவின் படமும், நாடக நூலை அவருடைய நினைவுக்குக் காணிக்கை யாக்கியிருப்பதாகப் படத்தின் கீழே ஒரு கவிதையும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே கவினார் கு. சா. கி. யை எனக்குப் பிடித்துவிட்டது. “படிக்கிறேன்; நன்றாயிருந்தால் நடிக்கிறேன்” என்று கூறினேன். பிறகு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

நாடகம் நன்றாயிருந்தது

நாடகத்தைப் படித்தேன். நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரைச் சந்தித்தேன். “நாடகம் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே மேடையேற்றக் கூடியவகையில் அமைந்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவரும் நாடகம் கொண்டு வந்து கொடுத்ததில்லை. இதனை எப்படித் தங்களால் உருவாக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் சிசித்துக் கொண்டே ‘நானும் ஒரு நடிகன்தானே’ என்றார். பிறகு பாய்ஸ் கம்பெனிகளின் அனுபவங்கள் பற்றியும், எங்கள் ஆசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் அவர் நடிப்புப் பயிற்சி பெற்ற விபரங்களைப் பற்றியும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.