பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496


நாடகத்திற்கான பாடல்கள் சிலவற்றைக் கவினார் கு. சா கி. யே புதிதாக எழுதினார். புரட்சிக் கவினார் பாரதிதாசனின் “அந்த வாழ்வுதான், எந்த நாள் வரும்” “சோலையிலோர் நாள் எனயே” “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்னும் மூன்று பாடல்களிையும் தக்க இடங்களில் சேர்த்துக் கொண்டோம். பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை மிகுந்த சுவையாக நடராஜன் தன் தங்கை லீலாவுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்துக் கொண்டோம். தேவையான ஒரு சில காட்சிகளும் தயாராயின. அந்தமான் கைதியைப் பொறுத்த வரையில் காட்சிகளுக்கு நாங்கள் முதன்மை அளிக்கவில்லை. சமூக நாடகமாதலால் ஆடை அணிபணிகளுக்கும் அவசியம் ஏற்படவில்லை. சுருக்கமான செலவில் கதையை முதன்மையாக வைத்து நாடகம் தயாராயிற்று. 20-9-45இல் அந்தமான் கைதி அரங்கேறியது.

குமாஸ்தாவின் பெண்ணுக்குப்பின் சிறந்த சமூகநாடகமாகக் அந்தமான் கைதி விளங்கியது. பேராசிரியர் வ. ரா. அவர்கள் ஒருநாள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “கவினார் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் அறியாத சாது போல இருந்துகொண்டு ஒரு அற்புதமான நாடகத்தைப் படைத்து விட்டாரே!” என்று கூறிப் பாராட்டினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் இந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன். நாடகக்கலை மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட சில விரும்பத்தகாத விளைவுகளின் காரணமாக அவர் எனக்குப் பதில் எழுத வில்லை. அந்தமான் கைதி நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். நான் அவரைச் சந்திக்க முயன்றேன்; இயலவில்லை. மாநாட்டுக்கூட்டம் அந்தமான் கைதிக்கு வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.

லீலா தன் காதலனிடம் அண்ணனைப் புகழ்ந்து பேசுகிறாள். காதலன் பாலு, அவருடைய சொற்பொழிவுத் திறனைப் பற்றி அவளிடம் பாராட்டிப் பேசுகிறான்;