பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு


தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் திரு. நாரண.துரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநாட்டை முன்னின்று நடத்திய அதன்செயலா வளர்கள், திரு வெ. நாராயணன், திரு பி.மகாலிங்கம் இருவரும் கோவைக்கு வந்திருந்தனார். மாநாட்டுக்கு நிதி சேகரிப்பதற்காக அவர்களோடு ஒருநாள் முழுதும் இருந்து உதவினேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மாநாட்டை நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்துக் கொண்டார். அந்த மாநாட்டில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். 12. 5. 48இல் நானும் தலைவர் ம.போ.சி. அவர்களும் கோவையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கி ருந்து நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். நான் விமானப் பயணம் செய்தது. அதுவே முதல் முறையாகும். 14- 5. 48 ஆம் தேதி காலே மாநாட்டில் கலந்து கொண்டேன். தலைமையுரை முடிந்து எழுத்தாள அன்பர்களின் சில சொற்பொழிவுகளும் நடந்தேறிய்பின் நாடகமும் பத்திரிகையும் என்னும் தலைப்பில் நான் பேசினேன். என் பேச்சு வருமாறு;

“அன்பர்களே நீங்கள் அறிஞர்கள். எதிர்காலத்தின் சிருஷ்டி கர்த்தர்கள். புதுயுகத்தை மலரச் செய்பவர்கள். உங்கள் பேனு முனேக்கு அணுகுண்டைவிட வலிமையுண்டு. உங்கள் முன்னிலை யில் நாடகக் கலையின் பயனைப் பற்றியோ, அதன் வளர்ச்சி நிலையைப் பற்றியோ, நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.