பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

549


கின்றன. சர்க்கார் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. சர்க் காருக்கு நாடகப் பயனை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்ய செல்வாக்குள்ள தினசரி பத்திரிக்கைகள் முன்வரவில்லை. --

பத்திரிகைகள் மனம் வைத்தால்இன்று தமிழ்நாட்டில் நடை பெறும் பல நாடகங்களுக்கு தமாஷா வரி இல்லாமற் செய்ய சர்க்காரைத் துண்டலாம், தமாஷா வரி இல்லாதிருந்தால் நல்ல பிரசார நாடகங்கள் குறைந்த வருவாயிலும் அதிகநாட்கள் நடை பெற உதவி புரிவதாயிருக்கும். தமாஷா வரி விலக்கத்திற்காக வென்றே கல்விப் பிரசார நாடகங்கள் பல தோன்றக்கூடும். மேடை நாடகவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் ஒருபிரிவு என் பதைப்பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் உணர்ந்து செயலாற்றி ல்ை கலைவளரும்; நாடு நலம்பெறும்; இருக்கும் நிலையை எடுத்துக் கூறிப் பரிகாரம் பெறும் நோக்கோடு செய்யப்பட்ட எனது சொற்பொழிவைக் குறை கூறியதாகக் கருதவேண்டாமென்று உங்களைக்கேட்டுக் கொள்ளுகிறேன்:--

“வில்லேருழவர் பகை வரினும் கொள்ளற்க,
சொல்லே ருழவர் பகை”

என்பது நமது தமிழ் மறை...ஆகவே,சொல்லேருழவர் ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் பகையுணர்ச்சி கொள்ளாமல் எனது சொற் பொழிவின் கருப்பொருளை மட்டும் கருத்தில் கொண்டு நாடகக் கலைக்கு ஆக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.”

மாநாட்டில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.,ம.ப.பெரியசாமி, துாரன், கி. வா. ஜகந்நாதன், அகிலன், கவினார் புத்தனேரி ரா.சுப்பிரமணியன்,கவினார் தே.ப. பெருமாள் முதலிய பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். கலைவாணர் இல்லத் தில் பெரும்பாலோர் தங்கினார்கள். நாகர்கோவிலில் உள்ள எங்கள் இல்லத்தில் எழுத்தாள அன்பர்களுக்கு விருந்தளித்தேன்.

மறுநாளும் மாநாடு நடைபெற்றது. அன்றிரவு ஒரு பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார் கலைவாணர். 16.5.48இல் நானும் தலைவர் ம. பொ. சி.யும் புத்தேரி சென்று கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களைப் பார்த்து வந்தோம். 18.5.48இல் நான் விமான மூலம் கோவைக்குத் திரும்பினேன்.