பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


அவனைப் புகழவேண்டும்? மன்னன்மீது பாடினால்தான் எனது. புலமை மன்னனுக்குப் புரியுமோ?” என்று கூறிவிட்டார்.

சுவாமிகளின் இத்தகைய தன் மதிப்பின் பெருமையும், நெஞ்சுறுதியின் அருமையும் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள இயலாத பருவம். இன்று அதன் சிறப்பை உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். சுவாமிகள் தமது வாழ்நாளில் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவேயில்லை என்பதை இங்கே மகிழ் வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

அன்னம் ஊட்டிய தெய்வம்

சிவகங்கையில் தாயோடு வசித்துவந்ததின் அருமை எனக்கு நன்முகத் தெரிந்தது. விருதுப்பட்டி, சாத்துரர் முதலிய ஊர்களில் நாடகம் முடிந்து வந்ததும் நான் அப்படியே உறங்கி விடுவேன் மதுரையில் நாடகங்கள் நடைபெற்றப்போது கூட வீடு தொலை விலிருந்ததால் பெரும்பாலும் வீட்டுக்குப் போவதில்லை. கம்பெனி வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். சிவகங்கையில் தாயாருடன் தனியே இருந்ததால் நாடகம் முடிந்து வந்தவுடன் உறங்க முடிவதில்லை எங்கள் தாயார் பாற்சோறு பிசைந்து அதிலேகொஞ்சம் மோர் வி ட் டு வைத்திருப்பார்கள். நாங்கள் வந்தவுடன் அந்தச் சோற்றைப் பிசைந்து எங்களுக்கு உருட்டிப் போடுவார்கள், சுடச்சுட சுண்டக் கறியோடு அதைச் சாப்பிடும் போது தேவாமிருதமாய் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சாதத்தைக் கொண்டு வருமுன் நான் உறங்கி விடுவேன்.

அன்னயார், உறங்கிய என்னை மடியில் போட்டுக்கொண்டு அன்னத்தை ஊட்டுவார்கள். நான் பாதி உறக்கத்திலேயே சாப்பிடுவேன். மறுநாள் காலேயில் எனக்கு இரவு சாப்பிட்ட நினைவே இராது “ஏனம்மா, என்ன எழுப்பிச் சாப்பாடு போட வில்லை?” என்று தாயைக் கோபித்துக் கொள்வேன். தாயார் சிரிப்பார்கள். “பெரியண்ணா ஏண்டா, துரங்கிக் கொண்டே சாப்பிட்டது நினைவில்லையா?” என்று கேட்பார். அப்போதுதான் எனக்குச் சாப்பிட்ட நினைவு வரும். அந்த அருமைத் தாயின் அன்பினை எண்ணி யெண்ணி இப்போது இன்புறுகிறேன்.