பக்கம்:எனது பூங்கா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவன் அமரன் ?



" அப்படி அறுத்தெறிவதற்கு அவன்மீது ஏதேனும் குற்றம் சாட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வீர்கள் ?" என்று கேட்டாள்.

அதற்கு ஸர். தாமஸ் லூஸி "ஆகா, அதுவா பிரமாதமான காரியம்? அந்தப் பயலை ஊரைவிட்டே ஓடிப்போய் விடும்படி செய்கிறேன்,பார்" என்று உறுமினார்.

ஆமாம்; அவர் அதுபோலவே செய்து விட்டார். அந்த இளைஞன் பரம தரித்திரனாய் இருந்தான். அவன் சிறு வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டதற்காகக் கோபித்து அவனுடைய தந்தை அவனுக்கு உதவி எதுவும் செய்ய மறுத்து விட்டார். அதனால் அவன் தனியே ஒரு சிறு கசாப்புக் கடை வைத்து உபாயமாகக் காலங் கழித்து வந்தான். அந்தக் கஷ்ட ஜீவனமும் நடக்காதபடி அவனுக்கு ஜமீந்தார் அநேக விதமாக இடைஞ்சல்களும் இடையூறுகளும் செய்ய ஆரம்பித்தார்.அவன் அவைகளைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான்.

ஆனால் அதிகாரிசெய்யும் அக்கிரமங்களை யாரால் பொறுக்க முடியம்? அதனால் அந்த ஊரை விட்டு லண்டன் மாநகருக்குப் போய்விடத் தீர்மானித்தான்.

கையில் காசு ஒன்றும் இல்லாததால், கால் நடையாகவே புறப்பட்டுப் போனான். ஆனால் லண்டன் நகரத்து வீதிகளில் கற்கள் பரப்பாமல் தங்கக் கட்டிகள் பரப்பியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். அதனால் அங்கே போய்ச் சேர்ந்து விட்டால், அப்புறம் தனக்கு அதிர்ஷ்டம் தான் என்று எண்ணினான். ஆனால் அங்கே போய்ச்

—99—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/101&oldid=1391241" இலிருந்து மீள்விக்கப்பட்டது