பக்கம்:எனது பூங்கா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

என்னால் அறிந்து அனுபவித்து ஆனந்திக்க முடியாமல் போகுமே !

 என் தோழன் இல்லாவிட்டால் - ஏன் என் தோழன் இருந்தும் குருடாய்விட்டால் - நானும் குருடனே. எதைத் தான் காணமுடியும்? குழந்தைகளைக் காண்பேனோ? நண் பர்களைக் கண்டு களிப்பேனோ ? மகாத்மாக்களை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமா? இயற்கை நமக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் நம் மகிழ்ச்சிக்கென்று விநோதம் விநோதமாய்த் தயாரிக்கும் இன்பக் காட்சிகள் எனக்கு எள்ளளவும் உண்மையாகுமோ?
 இங்ங்னம் சகல விஷயங்களிலும் என் தோழன் மூல மாகவே நான் ஸ்தூல சூட்சம உலகங்கள் இரண்டிலும் சஞ்சரிக்கும் சக்தியுடையவனாவேன். என்னையும் இந்த உலகத்தையும் இணைத்து நிற்பவன் என் தோழனே. நான் இதை எழுதுகிறேன். 'நான் எழுதுகிறேன்' என்று சொல்லிக்கொள்ளலாம். நீங்களும் நம்பிக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவாகுமோ? நான் எண்ணங்களை வகுக் கிறேன். அவன் கைகள்தானே அவைகளைப் பிறர் பார்க் கும் வண்ணம் இவ்விதம் எழுதி அமைக்கின்றன?
 இந்த உலக இன்பங்களை நான் அனுபவிக்கிறேனா - என் தோழன் அனுபவிக்கிறானா? இது ஒரு பெரிய சிக்க லான கேள்வி. இதை வாசிக்கும் நேயர்கள் ஆராய்ந்து முடிவுசெய்வார்களா? - ஒன்றுமட்டும் நிச்சயம். அவன் இல்லாவிட்டால் எனக்கு அணுவளவு அனுபவமும் இருக்க மாட்டாது. விருந்துக்கு அழைக்கிறார்கள். விதவிதமான உணவுகள், பலகாரங்கள், பானங்கள், ஈவநவமான உடை கள், அணிகள், புதுப்புதுக் காட்சிகள், விநோதமான

—26–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/25&oldid=1299098" இலிருந்து மீள்விக்கப்பட்டது