பக்கம்:எனது பூங்கா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. மனித தரிசனம்

ரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டிலே தயோஜெனிஸ் என்னும் பெயருடைய ஒரு பெரிய ஞானி இருந்தார்.‘அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தியாயிருப்பதைவிடத் தயோஜெனிஸ் ஞானியாக இருப்பது ஆயிரம் மடங்கு மேன்மை உடையது’ என்று உலகப் புகழ் பெற்ற மகா வீரனை அலெக்ஸாண்டர் மன்னன் ஒரு சமயம் கூறியதாகச் சொல்வதுண்டு. அத்துணைப் புகழ்வாய்ந்த அந்தச் சான்றோர் ஒருநாள்-பங்குனி மாதம் பதினைந்தாம் தேதி-பகல் பன்னிரண்டு மணிக்கு லாந்தர் ஒன்றை ஏற்றிக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த நாட்டுத் தலைநகரமாகிய ஆதென்ஸ் பட்டணத்தின் வீதிகள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அதைக் கண்ட அந்நகரத்து மாந்தர், “இதென்ன பட்டப் பகலில் இவர் விளக்கேற்றிக் கொண்டு, தெரு வழியே செல்கிறாரே, என்ன காரணமோ தெரியவில்லை. இவரோ மகாஞானி. இவரிடம் எப்படிப் போய்க் கேட்பது” என்று அச்சமும் வியப்பும் அடைந்தவர்களாய் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்களுள் சிறிது தைரியமுடைய ஒருவர் மெதுவாக அப்பெரியாரை அணுகி வணங்கி மிகுந்த வினயத்

-41-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/41&oldid=1392267" இலிருந்து மீள்விக்கப்பட்டது