பக்கம்:எனது பூங்கா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தி கற்பித்த கலை



அது யாதெனில் தன்னைத் தான் அறப்பெறுவதே யாகும். அது எளிதான காரியமன்று. ஆனால் அதைக் கொண்டு அது சாத்தியமான தன்று என்று எண்ணவேண்டியதில்லை. மக்களில் ஒருவர்க்குச் சாத்தியமானது எல்லோருக்கும் சாத்தியமானதே.

சுய நலம் விட்டுப் பொது நலம் கருதும் மனிதன் ஆவதற்கு காந்தியடிகள் கூறும் முறை எளியவாழ்க்கையை மேற்கொள்ளுவதாகும். எளிய வாழ்க்கை என்பது பிறர் உழைப்பை உபயோகியாமல் வாழ்வதேயாகும். தாம் முதன் முதலில் எழுதிய தமது “இந்திய சுயராஜ்யம்” என்னும் நூலில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து அதை விளக்கும் “எளிய வாழ்க்கை” என்னும் நூலை எழுதியுள்ள எட்வர்ட் கார்ப்பெண்டரைக் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையை எண்ணியேதான் காந்தியடிகள் பிறந்த சகாப்தத்தில் நானும் பிறக்கக் கொடுத்து வைத்தேன் என்று மகிழும் ஐன்ஸ்டீன், “நான் தினந்தோறும் நூறு முறை மறவாமல் நினைவு கூர்ந்து கொள்வது யாதெனில் பிறர் உழைப்பே என் உயிர்நிலை என்பதும், பிறர்க்கு உழைப்பதே என் கடன் என்பதுமாகும்” என்று கூறுகிறார்.

அவரைப்போல அனுதினமும் ஞாபகமாக வாழ்ந்து வந்தால் காந்தியடிகள் கூறும் அடிநிலைக் கலை வாழ்வு கைகூடுவதாகும். அங்ஙனம் எளிய வாழ்க்கை வாழ்பவரே உண்மையில் வாழ்பவர் ஆவர். அவர்கள் மக்கள் மட்டுமல்லர். தேவர்களுமே யாவர்.

–71–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/71&oldid=1392269" இலிருந்து மீள்விக்கப்பட்டது