124 டி என் அமெரிக்கப் பயணம்
எளியனேன் யான்எனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ?
- பா.க.தோ.பா. கோவிந்தன் பாட்டு.2
என்ற பாரதி வாக்கினால் போற்றுகின்றோம்.
இவனைச் சேவித்தபிறகு நாராயணன் சந்நிதிக்கு வருகின்றோம். அப்பெருமானை,
நாராயண நாராயண
நாராயண நம என்(று) ஆராயினும் இம்மந்திரம்
அது சந்தனம் மறவார் பேராயிரம் உடையான் அருள் பிறவார் பிறவியிலே வாரார்.இனி வாரார்என
மறைநூலும் விளம்பும் - ஒரு பழம் பாடல். என்ற பாசுரத்தைக் கொண்டு சேவிக்கின்றோம்.
அடுத்து குருமார்களின் சந்நிதிக்கு வந்து அவர்களை வணங்கிய பின் அநுமன் சந்நிதிக்கு வருகின்றோம். அந்த வாயுபுத்திரனை,
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றுஆ றாக
ஆரியற் காக ஏ.கி அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்குகண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்துரன்
அவன்எமை அளித்துக் காப்பான்
- கம்பரா. பாலகா, காப்பு அநுமன்துதி என்ற கம்பன் வாக்கால் சேவிக்கின்றோம்.
இங்ஙனம் வழிபாட்டை முடித்துக் கொண்டு பகல் ஒரு மணிக்கு வீடு திரும்புகின்றோம்.